Published : 09 Jan 2021 03:12 AM
Last Updated : 09 Jan 2021 03:12 AM
வேலூர்: வேலூர் அடுத்த புரம் ஆட்டோ நிறுத்தத்தை அகற்ற முயற்சிப்பதை நிறுத்தக்கோரி ஓட்டுநர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
வேலூர் அடுத்த புரம் நாராயணி ஆட்டோ நிறுத்தம் ஓட்டுநர் நலச்சங்கம் சார்பில் நேற்று அளித்த மனுவில், ‘‘வேலூர் -ஊசூர் மாநில நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வருகிறோம். ஆட்டோ தொழிலை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் கந்தசாமி என்பவருக்கு பெட்டிக்கடை நடத்த அனுமதி அளித்துள்ளனர். இதனால் ஆட்டோ நிறுத்தத்தை அப்புறப்படுத்த முயற்சிக் கின்றனர். எனவே, ஆட்டோ நிறுத்தம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT