Published : 09 Jan 2021 03:12 AM
Last Updated : 09 Jan 2021 03:12 AM
வேலூர்: வேலூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டத்தை ஆட்சியர் சண்முகசுந்தரம் மாட்டு வண்டியில் சென்று தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவை தொடங்கி வைக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாட்டு வண்டியில் தப்பாட்டம் வரவேற்புடன் ஊர்வலமாகச் சென்று பொங்கல் வைத்து தீபாராதணை காண்பித்து தொடங்கி வைத்தார். கரோனா ஊரடங்கால் கல்லூரி வளாகத் தில் நடைபெற வேண்டிய விழாவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எளிமையான முறையில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரசு ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT