Published : 10 Dec 2020 03:17 AM
Last Updated : 10 Dec 2020 03:17 AM

நாட்றாம்பள்ளி அருகே கணவரை எரித்துக்கொன்ற மனைவி கைது தீக்காயமடைந்த 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

நாட்றாம்பள்ளி அருகே வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த கணவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார். தீக்காயமடைந்த 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த சோம நாயக்கன்பட்டி ரயில்வே ‘கேட்’ பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார் (37). இவரது மனைவி சத்யபிரியா(30). இவர்களுக்கு திருமண மாகி 12 ஆண்டுகள் ஆகிறது. பிரதீப் (11) என்ற மகனும், ப்ரிதீகா (8) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சசிக்குமார் வெளிநாட்டுக்கு வேலைக்காக சென்றார். சத்யபிரியா தனது குழந்தைகளுடன் சோமநாயக்கன் பட்டி கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், மனைவியுடன் பேச சசிக்குமார் வெளிநாட்டில் இருந்து புதியசெல்போன் ஒன்றை வாங்கி அனுப்பியுள்ளார். அதில், அவ்வப்போது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேசியும் வந்தார்.

இந்நிலையில், கரோனா நோய் தொற்று காரணமாக வெளிநாட்டில் ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததால், கடந்த ஆகஸ்ட் மாதம் சசிக்குமார் சொந்த ஊர் திரும் பினார். அப்போது, மனைவியின் செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் பல ஆண் நண்பர்களுடன் சத்யபிரியா தொடர்பில் இருப்பது தெரியவந்தது. மேலும், மனைவி யின் நடத்தையில் பல்வேறு மாற்றங்களை கண்ட சசிக்குமார் தனது மகன் பிரதீப்பிடம் விசாரித்த போது, பல உண்மைகள் வெளியே வந்தன. இதனால், தம்பதியிடையே கடந்த சில மாதங்களாக தகராறு நீடித்து வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சசிக்குமார் வீட்டின் படுக்கை அறையில் உறங்கிக்கொண்டிருந்தார்.

அருகேயுள்ள மற்றொரு கட்டிலில் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தனர். இரவு 11 மணியளவில், சசிக்குமார் மீது பெட்ரோலை ஊற்றிய சத்யபிரியா அவர் மீது தீயை வைத்தார். பின்னர் குழந்தைகள் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். குழந்தைகள் அலறியதால் அவர்களை மட்டும் மீட்டுக்கொண்டு சத்யபிரியா வெளியே ஓடி வந்தார்.

சசிக்குமார் வீட்டில் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தி னர் ஓடி வந்தபோது சசிக்குமார் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டதாகவும், குழந்தைகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாகவும், உடனடியாக தான் குழந்தைகளை மீட்டதாக சத்யபிரியா பொது மக்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த நாட்றாம்பள்ளி காவல் ஆய்வாளர் அருண்குமார், உதவி காவல் ஆய் வாளர் கமலக்கண்ணன் மற்றும் காவல் துறையினர் அங்கு சென்று,80 சதவீதம் தீக்காயமடைந்த சசிக் குமார் மற்றும் அவரது குழந்தை களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத் தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து 3 பேரும் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப் பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி சசிக்குமார் நேற்று உயிரிழந்தார். குழந்தைகள் 2 பேரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, சசிக்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் சிவகாமி (58) நாட்றாம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சத்யபிரியாவிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் தான் கணவர் மற்றும் குழந்தைகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றதும், இதற்கான திட்டத்தை கடந்த ஒரு மாதமாக நடத்தி வந்ததாகவும், பொதுமக்கள் திரண் டதால் சசிக்குமார் தற்கொலை செய்துகொள்ள முயன்றார் என நாடகமாடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் சத்யபிரியாவுடன் தொடர்பில் இருந்த 10 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x