Published : 22 Oct 2021 03:07 AM
Last Updated : 22 Oct 2021 03:07 AM
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல் பள்ளிப்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 பேர் உண்டியலை திருடிச்செல்வது தெரியவந்தது.
அவர்களை விரட்டி பிடித்த பொதுமக்கள், 2 பேரையும் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் மேட்டுப் பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலு(23), பிரசாந்த்(23) என்பதும், நண்பர்களான இவர்கள் 2 பேரும் கோயிலில் நுழைந்து உண்டியல் காணிக்கை பணத்தை திருடிச்செல்ல முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT