Published : 22 Oct 2021 03:07 AM
Last Updated : 22 Oct 2021 03:07 AM

உண்டியல் காணிக்கை பணத்தை திருட முயன்ற இருவர் கைது :

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல் பள்ளிப்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 பேர் உண்டியலை திருடிச்செல்வது தெரியவந்தது.

அவர்களை விரட்டி பிடித்த பொதுமக்கள், 2 பேரையும் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் மேட்டுப் பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலு(23), பிரசாந்த்(23) என்பதும், நண்பர்களான இவர்கள் 2 பேரும் கோயிலில் நுழைந்து உண்டியல் காணிக்கை பணத்தை திருடிச்செல்ல முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x