Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

ஜிஎஸ்டி கூட்டத்துக்கு முன் ஆலோசனை நடத்த வர்த்தக சங்கம் வலியுறுத்தல் :

மதுரை

தமிழக நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன், வணிக வரி அமைச்சர் பி.மூர்த்தி ஆகி யோரிடம் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஜிஎஸ்டிக்கான அனைத்து அதிகாரங்களும், அனைத்து மாநில நிதியமைச்சர்களும் பிரதிநிதியாக உள்ள ஜிஎஸ்டி கவுன்சிலிடம் கொடுக்கப்பட்டு விட்டது.

எனவே வணிகத் துறைக்கும், மாநில அரசுக்கும் இடையே தொடர்பு நீடிக்க, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில நிதியமைச்சர் கலந்து கொள்ளும் முன் வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கும் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தும் என பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x