Published : 28 Jul 2021 03:17 AM
Last Updated : 28 Jul 2021 03:17 AM

மதுரையில் சிபிஐ அதிகாரிகள் போன்று நடித்து - கோயிலுக்கு சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு :

மதுரை தெற்குவாசல் நாடார் வித்தியா சாலை தெருவைச் சேர்ந்தவர் ஷயிலாவதி (70).

இவர் நேற்று முன்தினம் வில்லாபுரம் மெயின் ரோட்டிலுள்ள வெள்ளை பிள்ளையார் கோயிலுக்குச் சென்றிருந்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே தனியாக நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் தாங்கள் சிபிஐ அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டனர்.

பின்னர் வயதான நீங்கள் இவ்வளவு நகைகளை அணிந்துகொண்டு வெளியே வரக் கூடாது என எச்சரித்தனர். பின்னர் அவரிடம் இருந்து 6 பவுன் தங்கச் சங்கிலியை கழற்றி வாங்கினர். பின்னர் அதை காகிதத்தில் மடித்துக் கொடுப்பது போல பார்சல் செய்து கொடுத்தனர்.

அவர் வீட்டில் சென்று பார்த்தபோது அதில் நகை இல்லை. இதுகுறித்து புகாரின்பேரில் அவனியாபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x