Published : 28 Jul 2021 03:17 AM
Last Updated : 28 Jul 2021 03:17 AM

நில ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு :

திருமங்கலம் அருகே 2.17 ஏக்கர் ஆதிதிராவிடர் கிராம நத்தம் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக 12 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

திருமங்கலம் மேலக்கோட்டை கிராமத்தில் 2.17 ஏக்கர் ஆதி திராவிடர் கிராம நத்தம் இடத் தைச் சிலர் ஆக்கிரமித்து தோட்டம் போட்டுள்ளனர். அந்த இடத்தின் வழியாக ஆதிதிராவிட சமூக மக்கள் செல்ல அனும திப்பதில்லை.

இதனால் தண்ணீர் பிடிக்க, பள்ளி, கல்லூரிகள், விவசாய நிலங்களுக்குச் செல்ல அரை கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண் டியுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகளுக்கு பலமுறை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக் கவில்லை. ஆக்கிரமிப்பு இடத்தை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உசிலம்பட்டி ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இருப் பினும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக் கவில்லை.

நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடருமாறு ஆக்கிரமிப் பாளர்களை அதிகாரிகள் தூண்டி விடுகின்றனர்.

எனவே ஆட்சியர் உத்தரவுப்படி மேலக்கோட்டையில் ஆக்கிர மிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர் வில் விசாரணைக்கு வந்தது. பின்னர், ஆக்கிரமிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க வேண்டும்.

பின்னர் ஆக்கிரமிப்பு உறு தியானால் 12 வாரத்தில் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x