Published : 28 Jul 2021 03:17 AM
Last Updated : 28 Jul 2021 03:17 AM
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 39 விவசாயிகளின் 1,04,942 தேங்காய்கள் ஏலம், மதுரை விற்பனைக்குழு கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் 21 வியாபாரிகள் பங்கேற்றனர். ஏலத்தில் என்றும் இல்லாத வகையில் அதிகபட்சமாக ஒரு தேங்காய் ரூ.20க்கு ஏலம் போனது. குறைந்தபட்சமாக ரூ.8.11க்கும், சராசரியாக ரூ.10.22க்கும் ஏலம் போனதில், ரூ.10.36 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றது.
மேலும் 2 விவசாயியின் 153 கிலோ கொப்பரை ஏலம் விடப்பட்டது. இதில் 5 வியாபாரிகள் பங்கேற்று அதிகபட்சமாக ரூ.92க்கு ஏலம் போனதில், ரூ.11,626-க்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT