Published : 26 Jul 2021 03:13 AM
Last Updated : 26 Jul 2021 03:13 AM
கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக 7 பாஜகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பிரதமர், மத்திய உள்துறை அமைச்சருக்கு எதிராகப் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் பாஜகவினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கரோனா தடுப்பு விதி களை மீறியதாக சுப்ரமணியபுரம் காவல்நிலைய எஸ்ஐ பாலமுருகன் புகார் அளித்தார். அதன்பேரில், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT