Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

கரோனா நிவாரணம் தேமுதிக ரூ.10 லட்சம் :

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனாவை கட்டுப்படுத்த ஏதுவாக பல்வேறு மாவட்டங்களில் தேமுதிகவின் சார்பாக பல்வேறு நிவாரணங்களை வழங்கி உள்ளோம். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.

இந்நிலையில் முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ.10 லட்சம் வழங்க இருக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x