Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM

கோடை மழையால் சேதமடைந்த நெற்பயிர் : மதுரை அருகே விவசாயிகள் வேதனை

மதுரை மாவட்டத்தில் பெய்த கோடை மழையால் நெற் பயிர்கள் சேதமடைந்தன.

மதுரை மாவட்டம் களிமங்கலம், ஓவலூர், குன்னத்தூர் கிராமங் களில் 1,300 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்கள் நன்கு வளர்ந்து அறு வடைக்குத் தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் கோடை மழை பெய்ததால் நெற்பயிர்கள் தரையில் சாய்ந்தன. இதனால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. பல இடங்களில் நெற்பயிர்கள் நீரில் அழுகிவிட்டன. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x