Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM

பழநியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் : போதிய ஆக்சிஜன் கொடுப்பதில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு

பழநி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் அலட் சியம் காட்டுவதாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பழநியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பால் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பழநி அரசு மருத்துவமனை, பழனியாண்டவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் 260 படுக்கை வசதிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட் களில் பழநி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்றுவந்த பத்துக்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து உயிரிழந்தது சிகிச்சையில் இருப்பவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மூச்சுத் திணறல் ஏற்படும் தொற்றாளர்களுக்கு போதிய ஆக்சிஜன் கொடுப்பதில்லை என்று அங்கு சிகிச்சையில் உள்ளவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கையில் உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் தீர்ந்தவுடன் மாற்று சிலிண்டர் தர அலைக்கழிப்பதாகவும் குற்றம்சாட்டினர். கரோனா வார்டுக்கு செவிலியர்கள் மட்டும் வருகை தருகின்றனர். மருத்துவர்கள் வருவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உதயகுமார் கூறுகையில், தேவையான அளவு ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பு உள்ளது. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். நோயாளிகளின் உடல்நலனைப் பொறுத்தே இறப்பு உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்பு ஏற்படவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x