Published : 03 Mar 2021 03:25 AM
Last Updated : 03 Mar 2021 03:25 AM
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் அமைக்கப்பட்ட தேசிய முதியோர் நல மருத்துவ மையம், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
நோயாளிகளின் தனிமை, சிகிச்சை, தொற்றால் ஏற்பட்ட அச்சம் போன்றவற்றைப் போக்க மனநல ஆலோசனை மையமும் அமைக்கப்பட்டது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்று குறையத் தொடங்கியதால் மருத்துவமனையை மூடுவதற்கு சுகாதாரத் துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் மேலும் 3 மாதங்களுக்கு மருத்துவமனையை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT