Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

ஏப்ரல், மே மாத அறுவடையின்போது நிலக்கடலைக்கு ரூ.51 விலை கிடைக்கும்

தமிழகத்தில் கடந்த 2018-19-ம் ஆண்டு 3.35 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், 4.85 லட்சம் டன் நிலக்கடலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் நிலக்கடலை பயிரிடும் முக்கிய மாவட்டங்களாகும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆடிப் பட்டத்திலும், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தைப் பட்டத்திலும் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு நிலக்கடலை வரத்து காணப்படுகிறது. இந்நிலையில், விவசாயிகள் நிலக்கடலை விதைப்பு தொடர்பான முடிவுகளை எடுக்கும் வகையில், கடந்த 20 ஆண்டுகளாக திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய நிலக்கடலை விலை சந்தை நிலவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதன்படி, வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அறுவடையாகும் நிலக்கடலைக்கு கிலோவுக்கு ரூ.51-53 வரை விலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x