Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

600 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை இடையர் வீதியில் உள்ள ஒரு கிடங்கில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் (குட்கா) பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஆர்.எஸ்.புரம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கிடங்கில் தனிப்படை போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு மூட்டைகளில் 600 கிலோ புகையிலைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.5.40 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்தபோலீஸார், அவற்றைப் பதுக்கிவைத்திருந்ததாக இடையர் வீதிவிக்ரம் சிங்கை(23) கைதுசெய்தனர். இவர், பெங்களூரு விலிருந்து புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்து, கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x