Published : 23 Jan 2021 03:16 AM
Last Updated : 23 Jan 2021 03:16 AM

ஏழை குடும்பத்தின் வருமானத்தை ரூ.20 ஆயிரமாக உயர்த்துவதே நோக்கம் மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் பேச்சு

ஏழைக் குடும்பத்தின் வரு மானத்தை குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரமாக உயர்த்துவதே நோக்கம் என மத்திய கால்நடை மற்றும் பால், மீன்வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

மானாமதுரையில் அக்குவா அக்ரி என்ற தனியார் நிறுவனத்தில் மேம்படுத்தப்பட்ட கடற்பாசி இயற்கை குருணை உரத்தை அறி முகப்படுத்தி மத்திய அமைச்சர் பேசியதாவது:

மீனவர்கள், ஏழைகளின் வருமானத்தைப் பெருக்க பிர தமர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். மானாமதுரையில் 6 ஆயிரம் டன் கடற்பாசி மூலம் உணவுப் பொருட்கள், மருந்துகள் உள் ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அதை 6 லட்சம் டன்னாக உயர்த்துவதன் மூலம் வேலைவாய்ப்பை அதி கரித்து, ஏழைகளின் வாழ்க்கை மேம்படுத்தப்படும்.

தற்போது கடற்பாசி மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடற்பாசி தொழில் மூலம் ஒரு குடும்பத்தின் வருமானத்தைக் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பதே எனது நோக்கம். கடற்பாசி உரத்தைப் பயன்படுத்தினால் புற்றுநோயை முற்றிலும் தடுக்கலாம். மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் விவசாயிகள் ரசாயன உரத்தைக் கைவிட நினைக்கின்றனர். இதையடுத்து இயற்கை உரங்கள் தயாரிப்பில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன, என்று கூறினார்.

மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, மீன்வளத் துறை இயக்குநர் ஜெ.ஜெயகாந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x