Published : 23 Jan 2021 03:16 AM
Last Updated : 23 Jan 2021 03:16 AM

புதிய காவல் நிலையக் கட்டிடங்கள் காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்

மதுரை எஸ்.எஸ்.காலனி மற்றும் கீரைத்துறை காவல் நிலையக் கட்டிடங்களை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்.

எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்துக்கு எல்லீஸ் நகர் முதல் பால்பூத் அருகே 7,140 சதுரஅடியில் ரூ.1 கோடியே 58 லட்சத்து 37 ஆயிரம் செலவில் 2 மாடி கட்டிடம் கட்டப்பட்டது. வில்லாபுரம் ஆர்ச் அருகே ரூ.1 கோடியே 58 லட்சத்து 37 ஆயிரம் செலவில் 7,293 சதுர அடியில் கீரைத்துறை காவல்நிலையத்துக்கு இரண்டு மாடி கட்டிடம் கட்டப்பட்டது.

இந்த 2 காவல்நிலையங் களையும் சென்னையில் இருந்த படி காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.

எஸ்.எஸ்.காலனி புதிய காவல் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் பாஸ் கரன், சிவபிரசாத், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்கழகப் பொறியாளர்கள் ஜெயக்குமார், நக்கீரன் உள்ளிட்டோரும், கீரைத் துறை காவல் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை ஆணை யர்கள் பழனிக்குமார், சுகுமாறன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x