Published : 23 Jan 2021 03:16 AM
Last Updated : 23 Jan 2021 03:16 AM
மதுரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தையொட்டி மதுரை வடக்கு, தெற்கு மற்றும் மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், ஊழியர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம் பெற வந்தவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந் தவர்கள் பங்கேற்றனர்.
சாலை விதிகளை மதிப்போம். வாகனங்களை முந்திச் செல்ல முயற்சிக்க மாட்டோம். ஹெல் மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டுவோம். அதி வேகத்தில் செல்ல மாட்டோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT