Published : 19 Jan 2021 06:50 AM
Last Updated : 19 Jan 2021 06:50 AM
மதுரையில் முன்னாள் துணை வட்டாட்சியர் வீட்டில் 65 பவுன் நகைகளும், முன்னாள் வங்கி அதிகாரி வீட்டில் 385 கிராம் வெள்ளிப் பொருட்களும் திருடு போயின.
மதுரை பைபாஸ் சாலையில் துரைசாமி நகர் சாலினி தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(60). முன்னாள் துணை வட்டாட்சியர். இவரது மகனுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் தற்போது ராஜபாளையத்தில் வசிக்கிறார்.
ரவிச்சந்திரன் தனது குடும் பத்தினருடன் கடந்த 15-ம் தேதி மகன் வீட்டுக்குச் சென் றார். நேற்று முன்தினம் இரவு மது ரைக்குத் திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த 65 பவுன் நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருட்கள், துப்பாக்கி ஒன்று திருடு போயிருப்பது தெரியவந்தது. எஸ்எஸ்.காலனி போலீஸார் விசாரிக்கின்றனர்.
வங்கி அதிகாரி வீட்டில் திருட்டு
இதுகுறித்து சமயநல்லூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT