Published : 09 Dec 2020 03:15 AM
Last Updated : 09 Dec 2020 03:15 AM

முதல்வரால் புதுவையில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்குமா..! போராட்ட படத்தை பதிவிட்டு ஆளுநர் எச்சரிக்கை

நாடு முழுவதும் வேளாண் சட்டங் களை திரும்பப்பெற வலியுறுத்தி நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மறியல் போராட்டம் நடத்தின.

இப்போராட்டத்தின்போது முதல்வர் நாராயணசாமி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் பங்கேற்ற போராட்ட புகைப்படத்தை தனது வாட்ஸ்அப்பில் பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கிரண்பேடி வெளியிட்ட பதிவில், “இதுபோன்ற சூழ்நிலையை பார்க்கும்போது புதுவை யூனியன் பிரதேசத்தில் மீண்டும் கரோனா பரவல் அதிக ரிக்கும்.

இதை தடுக்க மருத்துவம் மற்றும் தடுப்புக் குழுவினர் தயாராக வேண்டும். இது புதுவை மக்களுக்கான முன்னெச்சரிக்கை பதிவு மட்டுமே.

எனவே பொதுமக்கள் புதுவையை பாதுகாக்கவும் தங்களை பாதுகாத்துக் கொள் ளவும் நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும்" எனத் தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x