Published : 09 Sep 2021 03:14 AM
Last Updated : 09 Sep 2021 03:14 AM
கேரள மாநில கப்பல் மற்றும் உள்நாட்டுப் போக்குவரத்துக் கழக இயக்குநர் ஐஏஎஸ் அதிகாரி என். பிரசாந்த். கேரள கப்பல் மற்றும் உள்நாட்டுப் போக்குவரத்துக் கழகத்துக்கும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கும் இடையே மீன்பிடி உரிமை, படகுவிடுதல் தொடர்பாக எழுந்த ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் சட்டப்பேரவையில் கடும் அமளி யில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக பிரசாந்துக்கு கேரள பெண் பத்திரிகையாளர் ஒருவர் வாட்ஸ் அப்பில் கேள்வி அனுப்பி பதில் பெற முயன்றார். அதற்கு இரு ஆபாச ஸ்டிக்கர்களை அனுப்பி வைத்தார் பிரசாந்த்.
அவற்றை பெண் பத்திரிகை யாளர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கேரள உழைக்கும் பெண் பத்திரிகையாளர் கூட் டமைப்பு சார்பில் முதல்வர் பினராயி விஜயனுக்கு புகார் தரப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கையை ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் மீது போலீஸார் எடுக்கலாம் என முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.
இதையடுத்து ஐபிசி பிரிவு 509-ன் கீழ் பிரசாந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு வரக் கோரி போலீஸார் சம்மன் அனுப்பி யுள்ளனர். இவர் மீது கொச்சி பாலர் வட்டம் காவல் நிலையத் தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT