Published : 10 Aug 2021 03:15 AM
Last Updated : 10 Aug 2021 03:15 AM

குஜராத் குடிசையில் லாரி புகுந்து8 பேர் உயிரிழப்பு :

குஜராத் மாநிலத்தில் குடிசைக் குள் லாரி புகுந்து மோதிய விபத்தில் 8 பேர் மரணம் அடைந்தனர்.

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பட்ஹடா என்ற கிராமத்தில் சாலையோரம் அமைந்துள்ள குடிசைக்குள் நேற்று முன்தினம் இரவு கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று புகுந்து மோதியது. இதில் அந்த குடிசைக்குள் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். மேலும், இரண்டு குழந்தைகள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ராஜ்கோட்டில் இருந்து அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஜப்ராபாத் என்ற இடத்துக்கு லாரி சென்றுகொண்டிருந்தபோது டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாகவும் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x