Published : 23 Jul 2021 07:11 AM
Last Updated : 23 Jul 2021 07:11 AM

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் :

புதுடெல்லி: மத்திய அரசு புதிதாக அமல்படுத்தி உள்ள வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு எதிராகவும் பஞ்சாப், ஹரியாணா, உ.பி. உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லி எல்லைகளில் இதுவரை போராட்டங்களை தொடர்ந்தனர்.தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதனால் நாடாளுமன்றம் அருகே ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நாடாளுமன்றம் நிகழ்ச்சியை நடத்தப் போவதாக அறிவித்தனர். இதற்கு டெல்லி போலீசார் அனுமதி அளித்தனர்.

அதேநேரத்தில் டெல்லி எல்லைகளில் முகாமிட்டிருக்கும் விவசாயிகளில் 200 பேர் மட்டுமே ஜந்தர் மந்தர் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்திருந்தனர்.இதனையடுத்து டெல்லி எல்லைகளில் இருந்து நேற்று காலை பேருந்துகள் மூலம் ஜந்தர் மந்தருக்கு 200 விவசாயிகள் வந்தனர். அங்கு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, நேற்று முன்தினம் பேட்டியளித்த பாரதிய கிசான் யூனியன் விவசாய சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிகைத், ‘எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும். ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து 150 மீட்டர் தொலைவில்தான் நாடாளுமன்றம் உள்ளது. ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் தங்கள் சொந்த நாடாளுமன்றத்தை நடத்துவார்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x