Published : 12 Jun 2021 07:01 AM
Last Updated : 12 Jun 2021 07:01 AM

கர்நாடகாவில் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு :

கர்நாடகாவில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஜூன் 14-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக பெங்களூரு உள் ளிட்ட 20 மாவட்டங்களில் கரோனா தொற்று குறைந்துள்ள‌து. இந்நிலையில், முதல்வர்எடியூரப்பா நேற்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நட‌த்தினார்.

பின்னர் எடியூரப்பா கூறும் போது, ‘‘தொற்று அதிகமுள்ள சிக்கமகளூரு, ஷிமோகா உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. தொற்று குறைவாக உள்ள‌ 20 மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்களின் கடைகள், மதுக் கடைகளை காலை 7 மணி முதல்பிற்பகல் 2 மணி வரை திறக்கலாம்’’ என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x