Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM
பெங்களூரு: கர்நாடக நீர்வளத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்கிஹோலி, பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவரை பாலியல் ரீதியாக ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ, ஆடியோ சிடி ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஜார்கிஹோலி ராஜினாமா செய்த நிலையில், இதுகுறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண், கப்பன் பூங்கா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ரமேஷ் ஜார்கிஹோலி அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.
இதை ஏற்ற போலீஸார் நேற்று முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘எனக்கும் என் குடும்பத்தினரின் உயிருக்கும் ரமேஷ் ஜார்கிஹோலி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களால் ஆபத்து உள்ளது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT