Published : 14 Feb 2021 03:17 AM
Last Updated : 14 Feb 2021 03:17 AM
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் கடந்த மாதம் 15-ம் தேதி முதல் பொதுமக்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி நேற்று கூறும்போது, ‘‘ஸ்ரீ ராம் ஜென்ம பூசி தீர்த்த ஷேத்ரா வங்கிக் கணக்கில் இதுவரை ரூ.1,511 கோடி நன்கொடை வந்துள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு ஏராளமானோர் மிக ஆர்வமாக நன்கொடை வழங்கி உள்ளனர். நாடு முழுவதும் 4 லட்சம் கிராமங்களில், 11 கோடி குடும்பங்களை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT