Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM
நகர்: காஷ்மீரின் ஜம்மு நகரைச் சேர்ந்த சிறுமி குஹிகா சச்தேவ் (12).அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கிறார். கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் கரோனா பொது முடக்கத்தால் வேலை இழந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து சென்றதை தொலைக்காட்சியில் பார்த்து மிகவும் வேதனை அடைந்திருக்கிறார் குஹிகா.
அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. எனினும், அதற்கான பொருள் வசதி அன்று அவரிடம் இல்லை. இந்நிலையில், நல்ல குரல் வளம் கொண்ட சிறுமி குஹிகா, ஒரு பாடலை பாடி தனது யூடியூப் சேனலில் கடந்த நவம்பர் மாதம் பதிவிட்டார். சற்றும் எதிர்பாராத வகையில், சில வாரங்களுக்குள் அந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்திருந்தனர். அதன் அடிப்படையில், யூடியூப் நிறுவனம் அவருக்கு ரூ.1.11 லட்சத்தை அண்மையில் வழங்கியது.
இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த குஹிகா சச்தேவ், சிறிதும் யோசிக்காமல் அந்தப் பணத்தை கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்துக்கு கொடுக்க முடிவு செய்தார். குஹிகாவின் இந்த விருப்பத்தை அவரது பெற்றோரும் ஊக்குவித்தனர். இதையடுத்து, ஜம்முவில் உள்ள அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஷசி சுதனிடம் அந்தப் பணத்தை சிறுமி குஹிகா நேற்று ஒப்படைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT