Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM

‘பாரத ரத்னா’ விருது வழங்கக் கோரும் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும் தொழிலதிபர் ரத்தன் டாடா கோரிக்கை

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவுக்கு (83), நாட்டின் உயரிய ‘பாரத ரத்னா’ விருதுவழங்க வேண்டுமென தொழிலதிபர் விவேக் பிந்த்ரா ட்விட்டரில் பதிவிட்டார்.

இந்தக் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த சிலர் ‘#பாரத ரத்னா பார் ரத்தன் டாடா’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினர். இது ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இளம் சாதனையாளர்களுக்கு ரத்தன் டாடா ஊக்கமாக இருப்பதாக கூறியுள்ள ஒருவர், இந்தப் பிரச்சாரத்தில் மற்றவர்களும் இணைய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், ரத்தன் டாடா தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்குபாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சமூக வலைதளத்தில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களுடைய உணர்வை பாராட்டுகிறேன். அதேநேரம், இதுபோன்ற பிரச்சாரத்தை நிறுத்தவேண்டும். மாறாக, இந்தியனாக இருப்பதே அதிர்ஷ்டம் என கருதுகிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக மேலும் பங்களிக்க விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x