Published : 05 Jan 2021 08:22 AM
Last Updated : 05 Jan 2021 08:22 AM

கேரளாவில் 290 நாட்களுக்குப் பிறகு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு

திருவனந்தபுரம்: கரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.

இந்நிலையில், கேரளாவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த 1-ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள கலை-அறிவியல், பொறியியல் கல்லூரிகள், மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் காசர்கோடில் உள்ள ஒரே ஒரு மத்திய பல்கலைக்கழகம் என 1,350-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் 290 நாட்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டன. எனினும் குறைவான மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். முகக் கவசம் அணிதல், வெப்பப் பரிசோதனை, சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டுமென கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காலை 8.30 முதல் மாலை 5 மணி வரை 2 ஷிப்ட்களாக மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x