Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM
டெல்லியில் நேற்று 3-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்த வேறு இடம் ஒதுக்குமாறு விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு அழைப்புமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:டெல்லியின் பல்வேறு இடங்களில் கடும் குளிரில் விவசாயிகள் சாலையோரம் தங்கியுள்ளனர். உங்களுக்காக டெல்லியின் மிகப் பெரிய மைதானம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று அமைதியாக போராட்டம் நடத்தலாம். டிசம்பர் 3-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு மத்திய வேளாண் அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். விவசாயிகள் விரும்பினால் அதற்கு முன்பாகவே பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT