Published : 02 Sep 2021 03:13 AM
Last Updated : 02 Sep 2021 03:13 AM
வீட்டு உபயோகத்துக்கான சமை யல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25-ம், வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.75-ம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களில் சமையல் சிலிண்டர் விலை ரூ.290 அதி கரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில்கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரி வாயு சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.610-ல் இருந்து ரூ.660 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரு கிறது. பிப்ரவரியில் 3 முறை விலை உயர்த்தப்பட்டது. அந்த மாதம் 4-ம் தேதி ரூ.25, 15-ம் தேதி ரூ.50, 25-ம் தேதி மறுபடியும் ரூ.25 உயர்த்தப்பட்டது.
அடுத்து, மார்ச் 1-ம் தேதி ரூ.25 உயர்த்தப்பட்டது. இதன்படி, ஒரு மாதத்துக்குள் சிலிண்டர் விலை ரூ.125 அதிகரிக்கப்பட்டது. ஏப்ரல் 1-ம் தேதி சிலிண்டர் விலை ரூ.10 குறைக்கப்பட்டது. ஆனால், மீண்டும் கடந்த மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி உள்ளன இதன்படி, சென்னையில் கடந்த மாதம் ரூ.875.50-க்கு விற்கப்பட்ட வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, ரூ.25 அதிகரித்து, ரூ.900.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.290 உயர்ந்துள்ளது.
இதேபோல், வணிகரீதியான எரிவாயு சிலிண்டரின் விலையும் ரூ.75 உயர்ந்து ரூ.1,831 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த விலை உயர்வால், பொதுமக்கள் மிகுந்த கவலை அடைந் துள்ளனர்.
இதனிடையே பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 12 பைசா குறைந்து ரூ.99.08-க்கும், டீசல் லிட்டருக்கு 14 பைசா குறைந்து ரூ.93.38-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT