Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM

தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா புதிதாக 6,711 பேருக்கு தொற்று : முதியவர்கள் உட்பட 19 பேர் உயிரிழப்பு

துரைமுருகன்

சென்னை

தமிழகத்தில் புதிதாக 6,711 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதியவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 4,036, பெண்கள் 2,675 என மொத்தம் 6,711 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஓமன், இங்கிலாந்து, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வந்த 8 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 2,105 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 40,145 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 45,751 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 80,910 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 710 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 2,339 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 17,098 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 46,308 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று ஒரே நாளில் முதியவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,927 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 4,332 பேர் உயிரிழந் துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென் னையில் 2 லட்சத்து 67,181, கோவை யில் 63,808, செங்கல்பட்டில் 61,409, திருவள்ளூரில் 48,548 என்ற எண் ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. தமிழகத்தில் 262 அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 2 கோடியே 6 லட்சத்து 3,108 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 82,982 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

துரைமுருகனுக்கு சிகிச்சை

திமுக பொதுச் செயலாளர் துரை முருகன், சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அவர் ஏற்கெனவே 2 தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்ட நிலை யில், சில நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் இருந்ததால் கரோனா பரி சோதனை செய்துகொண்டார். இதில், தொற்று இருப்பது உறுதியானது. இதை யடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப் படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

பின்னர், சிகிச்சைக்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது. அவர் நன்றாக உள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x