Published : 18 Dec 2020 03:16 AM
Last Updated : 18 Dec 2020 03:16 AM

9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் சே.பாலச் சந்திரன் கூறியதாவது:

குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் காரைக்கால், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்யக் கூடும்.

வட கடலோர, தென் தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங் களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.

வியாழன் காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டியில் 17 செ.மீ., திருக் கோவிலூரில் 16, புதுச்சேரியில் 15, விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x