Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

குமரி - பாம்பன் இடையே 4-ம் தேதி கரையை கடக்கிறது ‘புரெவி’ புயல் தென் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு

சென்னை

வங்கக் கடலில் இன்று உருவாகியுள்ள ‘புரெவி’ புயல், கன்னியாகுமரி- பாம்பன் இடையே வரும் 4-ம் தேதி அதிகாலை கரையை கடக்கக் கூடும். அதன் காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்றிரவு புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு ‘புரெவி’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘புரெவி’ புயல், இன்று மாலை இலங்கை யின் திரிகோணமலை அருகே கரை யைக் கடக்கும் என்றும், பின்னர் மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதிக்கு வந்து, கன்னியாகுமரி – பாம்பன் இடையே 4-ம் தேதி அதி காலை கரையைக் கடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது:

வங்கக் கடலில் நிலவிய காற்ற ழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற் றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கன்னியாகுமரிக்கு கிழக்கு மற்றும் தென் கிழக்கே சுமார் 860 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது, புயலாக வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை திரிகோணமலைக்கு அருகே இன்று (2-ம் தேதி) மாலையோ, இரவோ கரையை கடக்கும். அப்போது மணிக்கு 75 முதல் 85 கி.மீ. வேகத்திலும் சில சமயங்களில் மணிக்கு 95 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

இந்தப் புயல், பின்னர் குமரிக் கடலையொட்டி மன்னார் வளைகுடா வழியாக நகர்ந்து, மேலும் வலுப்பெற்று தென் தமிழக கடலோரப் பகுதியில் கன்னியாகுமரி - பாம்பன் இடையே வரும் 4-ம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும். இதன் தாக்கத்தால் தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக் குடி, கன்னியாகுமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய அதிகனமழை பெய்யக்கூடும். புதுக் கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன் னியாகுமரி புதுக்கோட்டை, சிவகங்கை, மாவட்டங்களில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

3-ம் தேதி காலை முதல் இரவு வரை தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதிகனமழை பெய்யக்கூடும். சிவ கங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதி களில் மிதமான மழையும், உள் மாவட் டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ராமநாதபுரம், திருநெல் வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியா குமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். 4-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் கனமழை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

புயல் காரணமாக தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதி, கேரள கட லோர பகுதிகள், தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு வரும் 4-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x