Published : 10 Aug 2021 03:15 AM
Last Updated : 10 Aug 2021 03:15 AM

தமிழகத்தில் புதிதாக 1,929 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் புதிதாக 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் 119 பேர் உட்பட 1,929 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. .

தமிழகத்தில் நேற்று ஆண்கள்1,109, பெண்கள் 820 என 1,929 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் 119 பேர்மற்றும் கேரளாவில் இருந்து வந்தஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 235, சென்னையில் 182 பேர்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x