Published : 02 Jul 2021 03:12 AM
Last Updated : 02 Jul 2021 03:12 AM

நீர், பருவநிலை தகவமைப்பு மையம் ஐஐடியில் தொடக்கம் :

சென்னை

ஜெர்மனி அரசு நிறுவனமான ஜெர்மன் அகாடமிக் எக்ஸ்சேஞ்ச் சர்வீஸ் உதவியுடன் சென்னை ஐஐடியில் சர்வதேச நீர் மற்றும் பருவநிலை தகவமைப்பு மையம்தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க நிகழ்ச்சி இணையவழியில் நடைபெற்றது. இதில் ஜெர்மனி துணை தூதர் கரீன் ஸ்டால் பேசும்போது, ‘‘டிஜிட்டல்மயமாக்கலால் பல்வேறு நன்மைகள் உள்ளன. கரோனாதொற்று சூழலிலும் இந்த திட்டத்தின் வளர்ச்சி எந்த வகையிலும் தாமதம் ஆகவில்லை. கல்வித் துறையில் ஏராளமான புதிய வாய்ப்புகள் உள்ளன. இந்த திட்டத்தில் சென்னை ஐஐடி முக்கிய பங்கு வகிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி பேசும்போது, ‘‘நீர்பாதுகாப்பு, பருவநிலை மாற்றம்ஆகிய துறைகளில் மாணவர்களுக்கு பல்வேறு புதிய வாய்ப்புகளை இந்த மையம் கொண்டுவரும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x