Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM
வருவாய், ஊரக வளர்ச்சித் துறைகளின் செயலர்கள் உட்பட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட உத்தரவு:
சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் அறநிலையத் துறை செயலராக இருந்த விக்ரம் கபூர், திட்டம் மற்றும்வளர்ச்சித் துறை செயலராகவும், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை செயலர் மங்கத்ராம் சர்மா,பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலைகள் சீரமைப்பு மற்றும் மேலாண்மை திட்டஇயக்குநராகவும், தமிழ்நாடு சிறுதொழில் கழக மேலாண் இயக்குநர்விபு நய்யர், நில நிர்வாக ஆணையராகவும், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலர் ஜெய ரகுநந்தன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையின் பயிற்சிப் பிரிவு இயக்குநர் ஜெனரலாகவும், வணிகவரி மற்றும் பதிவுத் துறைசெயலராக இருந்த பீலா ராஜேஷ்,கைத்தறி மற்றும் ஜவுளித் துறைஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநராக இருந்த சிஜி தாமஸ் வைத்யன், தொழில் மற்றும் வணிகத் துறை இயக்குநராகவும், ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராகவும், வருவாய்த் துறைசெயலர் அதுல்யமிஸ்ரா, தமிழ்நாடுமின்நிதி நிறுவன தலைவராகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்பகிர்மானக் கழகத்தின் மேலாண் இயக்குநராக இருந்த பங்கஜ்குமார் பன்சல், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக தலைவராகவும், பணியாளர் மற்றும்நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் எஸ்.ஸ்வர்ணா, தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி சேவை நிறுவன தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT