Published : 22 Feb 2021 03:16 AM
Last Updated : 22 Feb 2021 03:16 AM
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:
வளிமண்டல மேல் அடுக்கில் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றிலும், வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றிலும் சுழற்சி நிலவுகிறது. இதனால் காற்று வீசுவதில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசிலஇடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு.
21-ம் தேதி காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுச்சேரி, கடலூரில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT