Published : 14 Dec 2020 03:14 AM
Last Updated : 14 Dec 2020 03:14 AM

9 மாதங்களுக்குப் பிறகு மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள் இன்று திறப்பு

சென்னையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள் 9 மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்படுகின்றன.

சென்னையில் கடந்த மார்ச் மாதம் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் தடை விதிக்கப்பட்டது. அரசு தற்போது பல்வேறு தளர்வுகளை அளித்து வந்தாலும், கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கவில்லை.

இதற்கிடையே, ஏழை எளியமக்களின் சுற்றுலாத் தலமாக மெரினா கடற்கரை விளங்குவதால் கடற்கரைகளை திறக்க வேண்டும் என்று பொதுமக்களும், அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் டிச.14-ம் தேதிமெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்டகடற்கரைகள் திறக்கப்படும் என்றுமுதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி இன்றுமுதல்கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் நேற்று மேற்கொண்டது. கடைக்காரர்களும் தங்கள் கடைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “மெரினா உள்ளிட்ட கடற்கரைகள்திங்கள்கிழமை திறக்கப்படுகின்றன. கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். பொதுமக்களும், வியாபாரிகளும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x