Published : 16 Nov 2020 03:12 AM
Last Updated : 16 Nov 2020 03:12 AM

தமிழகத்தில் புதிதாக 1,819 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 1,819 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். முதியவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள்1,150, பெண்கள் 669 என மொத்தம்1,819 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 502, கோவையில் 171, செங்கல்பட்டில் 123 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 58,191 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 1 லட்சத்து 99,805 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 30,272 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 680 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 2,520 பேர் குணமடைந்தனர். சென்னையில் 5,469 பேர் உட்பட தமிழகம்முழுவதும் 17,748 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 5 பேர், தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் என நேற்று 12 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 5 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,478 ஆகஉயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,765 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 8,668, கோவையில் 46,408, செங்கல்பட்டில் 45,893,திருவள்ளூரில் 39,619 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம்உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x