Published : 14 Nov 2020 03:13 AM
Last Updated : 14 Nov 2020 03:13 AM

இதுவரை 7.25 லட்சம் பேர் குணமடைந்தனர் தமிழகத்தில் புதிதாக 1,939 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது

தமிழகத்தில் கரோனாவில் இருந்து 7.25 லட்சம் பேர் குணமடைந்தனர். புதிதாக 1,939 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,193, பெண்கள் 746 எனமொத்தம் 1,939 பேர் கரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 512, கோவையில் 179, செங்கல்பட்டில் 145 பேருக்குவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 54,460 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 1 லட்சத்து 98,459 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 25,258 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 687 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 2,572 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர்.

சென்னையில் 5,469 பேர்உட்பட தமிழகம் முழுவதும்17,748 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 7 பேர், தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் என நேற்று 14 பேர் உயிரிழந்தனர். அதிபட்சமாக சென்னையில் 5 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,454 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,758 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 7,686,கோவையில் 46,055, செங்கல்பட்டில் 45,590, திருவள்ளூரில் 39,437 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.

தமிழகத்தில் 208 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 9 லட்சத்து 37,407 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 73,486 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 26,682 குழந்தைகள், 13 வயது முதல் 60 வயதுக்குஉட்பட்டவர்கள் 6 லட்சத்து 32,832 மற்றும் 60 வயதுக்குமேற்பட்டவர்கள் 94,946 பேர்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாகசென்னையில் 512, கோவையில் 179, செங்கல்பட்டில் 145 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x