Published : 14 Aug 2021 03:17 AM
Last Updated : 14 Aug 2021 03:17 AM

ஐபிஎல் டி20: : துபாய் சென்றது சிஎஸ்கே அணி :

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கியது. வீரர்கள் சிலருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஐபிஎல் தொடர்காலவரையின்றி நிறுத்திவைக் கப்பட்டது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) செப்டம்பர் 19-ம் தேதி முதல் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. அதன்படி தொடரில் பங்கேற்க தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி நேற்று சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டுச் சென்றது.

விமான நிலையத்தில் தோனி, சூட்கேஸுடன் இருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே அணி ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x