Published : 20 Dec 2020 03:13 AM
Last Updated : 20 Dec 2020 03:13 AM

2-வது கரோனா தடுப்பூசிக்குஅமெரிக்கா அனுமதி

வாஷிங்டன்

அமெரிக்காவை சேர்ந்த பைசர்நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியை பயன்படுத்த அந்த நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்டிஏ) ஒரு வாரத்துக்கு முன்பு அனுமதி வழங்கியது. கடந்த 14-ம் தேதி முதல் அமெரிக்கா முழுவதும் பைசர் நிறுவன கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியை பயன்படுத்த எப்டிஏ நேற்று அனுமதி வழங்கியது. மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 20 கோடி தடுப்பூசிகளை வாங்க அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் முதல் கட்டமாக ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா முழுவதும் 59 லட்சம் கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் கரோனா தடுப்பூசிகள் இரு முறை போட வேண்டிய தடுப்பூசிகளாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x