Published : 30 May 2023 06:06 PM
Last Updated : 30 May 2023 06:06 PM

அடையாறு புதிய பூங்காவுக்கு கருணாநிதி பெயர்: சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

சென்னை: சென்னை அடையாறில் புதிதாக அமைய இருக்கும் பூங்காவுக்கு ‘கருணாநிதி பூங்கா’ என்று பெயர் வைக்க சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் மே மாதத்திற்கான மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (மே 30) நடைபெற்றது. சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு நடக்கும் முதல் மாமன்ற கூட்டம் இதுவாகும். எனவே, மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு, மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் மொத்தம் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முக்கிய தீர்மானங்களின் விவரம்:

  • அடையார் மண்டலத்தில் 173 வார்டில் காந்திநகர் கால்வாய் கரை சாலையில் புதிதாக அமைய உள்ள பூங்காவிற்கு டாக்டர்.கலைஞர் மு கருணாநிதி பூங்கா என்று பெயர் சூட்டுவதற்கு அனுமதி.
  • பட்ஜெட்டில் அறிவித்தபடி, சென்னை பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களை நான்கு குழுக்களாக பிரித்து நான்கு வண்ண டி.சர்ட் கொள்முதல் செய்ய 62,06,647 ரூபாய் ஒதுக்கீடு.
  • பட்ஜெட்டில் அறிவித்த படி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளுக்கு வயலின், ட்ரம் செட் உள்ளிட்ட 10 இசை கருவிகள் வாங்க 4.99 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு.
  • சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மன்றக் கூடத்தில் உள்ள ஒலிபெருக்கி அமைப்பினை மேம்படுத்தி புதிய டிஜிட்டல் முறையிலான ஒலிபெருக்கியை அமைக்க டெலிகேட் கலந்தாய்வு மைக்குகள், சேர்மன் மைக்குகள், அதனை சார்ந்த கட்டுப்பாட்டு கருவிகள் மென்பொருள் மற்றும் சர்வர்களை வழங்கி நிறுவி சோதனை செய்தல் மற்றும் இயக்கி வைக்கும் பணிக்கு 3,43,02,300 ரூபாய் ஒதுக்கீடு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x