Published : 20 Feb 2023 08:59 AM
Last Updated : 20 Feb 2023 08:59 AM

உத்தனப்பள்ளியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு: கருப்பு துணி கட்டி விவசாயிகள் போராட்டம்

சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஓசூர் அருகே உத்தனப்பள்ளியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் 46-வது நாளான நேற்று கண்ணில் கருப்பு துணியைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர் அருகே உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் பரப்பளவில் 5-வது சிப்காட் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இப்பணிக்காக விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறு, குறு விவசாயிகள் உத்தனப்பள்ளியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 46-வது நாளான நேற்று உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்கள் கண்களில் கருப்பு துணியைக் கட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x