Published : 17 Feb 2023 03:42 AM
Last Updated : 17 Feb 2023 03:42 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடைவரை கோயில் மலையில் தீ விபத்து

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூவரைவென்றான் குடைவரை கோயிலில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூவரைவென்றான் கிராமத்தில் பிரிசித்தி பெற்ற மலைக்கொழுந்தீஸ்வரர் குடைவரை கோயில் உள்ளது. இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்த குடைவரை கோயில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளது. இந்த மலைக்கு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளது.

இந்த குடைவரை கோயில் அமைந்துள்ள மலை அடிவாரத்தில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ சிறிது நேரத்தில் மலையில் உள்ள காய்ந்த புற்கள் மற்றும் மரங்களில் பரவியது. வத்திராயிருப்பு தீயணைப்ப துறையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் கோயிலுக்கு ஏதும் சேதம் ஏற்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x