Published : 30 Dec 2022 10:23 AM
Last Updated : 30 Dec 2022 10:23 AM

“துயரை விவரிக்கச் சொற்கள் இன்றித் தவிக்கிறேன்” - பிரதமரின் தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த இரங்கல் செய்தியில், "அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, தங்கள் அன்புத் தாயார் ஹீராபாவுடன் தாங்கள் கொண்டிருந்த உணர்வுபூர்வமான பிணைப்பை அனைவருமே அறிவோம்.

அன்னையின் இழப்பினால் உண்டாகும் வலி என்பது யாராலும் தாங்கிக்கொள்ள முடியாதது. தங்கள் தாயாரின் இழப்பினால் நான் அடைந்துள்ள துயரை விவரிக்கச் சொற்கள் இன்றித் தவிக்கிறேன். துயர்மிகு இந்நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தாயாருடன் தாங்கள் கொண்டிருந்த அழகிய நினைவுகளில் அமைதியும் இளைப்பாறுதலும் பெறுவீர்களாக." இவ்வாறு அந்த செய்தியில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x