Published : 30 Dec 2022 12:06 AM
Last Updated : 30 Dec 2022 12:06 AM

புத்தாண்டு கொண்டாட்டம் | சென்னை கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி டிசம்பர் 31ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், "2023ம் ஆண்டு
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை கருதி டிசம்பர் 31ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட மெரினா, சாந்தோம், பெசண்ட் நகர், எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய அனைத்து கடற்கரை மணற்பகுதி, கடற்கரை ஓரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

எனவே பொதுமக்கள் டிசம்பர் 31ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் கடற்கரை மணற்பகுதிக்கு வரவேண்டாம் என்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x