Published : 06 Dec 2016 06:55 AM
Last Updated : 06 Dec 2016 06:55 AM

மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா: குடியரசுத் தலைவர் புகழஞ்சலி

தமிழக மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் தனது இரங்கல் செய்தியில், "தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் வசீகரத் தலைவர்களுள் ஒருவரான ஜெயலலிதா, தொலைநோக்குப் பார்வையும் நிர்வாகத் திறமையும் மிக்கவர்.

அவர் தனது வாழ்க்கையை தமிழகத்தின் சமூகப் பொருளாதார மாற்றங்களுக்கும் அதன் மக்களுக்கும் அர்ப்பணித்தவர்.

பல கோடி மக்களால் நேசிக்கப்பட்ட முக்கியத் தலைவரை நாடு இழந்துவிட்டது. தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்" என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x